கால நீதி மன்றம்
தீர்ப்பு கூறுகிறது
அனைவரும் ஆயுட் கைதிகள்
காரணம்?
சிறையிலிருந்து தப்பி வந்தது
கற்பச் சிறை
நட்புச் சிறை
காதல் சிறை
குடும்ப சிறை
இறுதியில் கல்லறை
கடலிலிருந்து
சிப்பியிலிருந்து
விடுதி பெற்ற முத்து
மனிதர்களிடம் ஆயுள் முழுவதும்
சிறை வாசம் செய்வதை போல
விடுதலை பெறுகிறான்
என்பதை விட
மற்றொன்றில் சிறைப் படுகிறான்
இதுதான் உண்மை
ஆம், இங்கு
உடல்களை
சிறைக்குள் வைத்துக் கொண்டு
உயிர்களுக்கு விடுதலை
கொடுக்கிறார்கள்
நீதியை சிறையிலடைத்துவிட்டு
நீதி மன்றங்களை
நடத்துகிறார்கள்
படு கொலை செய்தவனுக்கு
விடுதலை
பார்த்திருந்தவனுக்கு
பத்து வருஷம்
ஏன்..?
அனைவரும் ஆயுட் கைதிகளே..!
சிறை சாலைக்குள்ளேதான்
சிலருக்கு சிறை வாசம்
"போனஸ்"
ஓ...! விடுதலை
இதற்கு அர்த்தம் தேடி
அலைகிறோம்
அனுபவித்தவன் யாரும்
இங்கில்லை
நாங்கள்
"ஸ்ட்ரைக்" பண்ண போகிறோம்
"விடுதலை"
அகராதியை விட்டு
விடுதலையாக வேண்டும்...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக