வியாழன், 22 ஜனவரி, 2009

பாலை வனத்து "ஸம் ஸம்"

நீ - அன்று
அரபு மண்ணிலே
அவதரித்தாய்

ஒரு பாலகனின்
பாதம் பட்டதால் - ஒரு
பாலை நிலத்திலே
பரிணமித்தாய்.

ஒரு மலர் கூட பூக்காத
அந்த வனத்திலே - என்றும்
வாடாத மலராய்
வந்து நின்றாய்

அவள் - அந்த
பாலகனின் தாகத்துக்கு - தன்
மார்பகத்தில் பால் இன்றியா
தாகம் தீர்க்க
தண்ணீர் தேடினாள்?

அவள் - அந்த
ஸபா - மர்வா மலைகளுக்கிடையே
அலைந்த போது
சிந்திய கண்ணீரையாவது
சேமித்திருக்க கூடாதா?

இதயக்கிணற்றில்
நீர் இன்றியா
தேடி அலைந்தாள்?

இல்லை...
இதயத்தில் ஈரம்
இருந்தால்தான்

அந்த
முல்லைக்கு அமுதூட்ட
முளைத்த
முளையல்லவா நீ..?

அன்று
பிஞ்சு குழந்தையின்
பாதம் தொட்டதால் - உன்
மொட்டு விரிந்தது
ஒரு சொட்டு தாகத்துக்காய்
பாலை வனத்திலே - ஒரு
பொட்டு வைத்தாட் போல்
என்றும் பட்டுவிடாமல்
நிலை பெற்றுவிட்டாய்

எந்தவொரு மேகமும்
எந்தவொரு நதியும்
குறிப்பிட்ட இடங்களைத்தான்
குளிர வைக்கும்

ஆனால் - நீ
நீராகிச சென்று
நனைக்காத
நாடுண்டா சொல்?

எண்ணெய்க் கிணறுகளின்
சாம்ராஜியத்தில் - ஒரு
தண்ணீர்க் கிணறாய் நீ
தங்கியிருப்பதன் ரகசியம் என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக