வியாழன், 29 ஜனவரி, 2009

ஒரு நன்றியுள்ள ஜீவன்

பாருலகில்
பாவிகள் செய்யும் பாவத்தை
கழுவிச் செல்லும்
கடலலைகள்

கரையில்
பாவமே செய்யாத
பத்தினி போல்
சில தோணிகள்

கதிரவனின்
காலிக கதிர்களில்
முகம் கழுவும்
கடல் கரை மணல் பரப்புகள்

இந்த காட்சிகளை பார்த்து
நாணிக்க் கொண்டிருக்கும்
ஒரு கிழட்டுக் கிணறு
தூரத்தே....

கடல் கரையில்
மண் அள்ளுவதற்காக
ஒரு "டெக்டரில்"
சில மனிதர்களை
அள்ளிக் கொண்டுவந்த
படை வீரர் பதின்மர்
அதற்கொரு முரட்டு தலைவர்

வந்தவன்
கிணற்றின் மொட்டைத் தலையில்
சில செங்கற்களை வைத்துவிட்டு
ஒவ்வொன்றின் உயிரையும்
பறித்துக் கொண்டிருந்தான்
அவற்றின் சிவப்பு குருதி
பறந்து காற்றோடு கலக்கிறது

அந்த முரட்டுக்கும்
கிணற்றுக்கும் இடையில்
நிரந்தரமாய் தூங்கும் சிலர்
அது ஒரு சவக்காலை

எமன் வந்திருப்பதை
எள்ளளவும் நினைக்காத
நாயொன்று மெதுவாக...
மிக மெதுவாக - தனது
இறுதி நடையை ரசித்துக்கொண்டு
மெதுவாக...

அது...
பூமியை பார்க்கவில்லை
அதில் நிரந்தரமாகவே
தங்குவதை நினைத்தோ...!
சுற்றியிருப்பதை
சுவாரஸ்யமாக...

அதன் இறுதி நடை
எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது
மெதுவாக, மிக மெதுவாக....

தான் படைக்கப் பட்டது
எந்த இடத்து மண்ணென்று
முகர்ந்து கொண்டிருக்கிறது
அங்கயே தனது சமாதியை
அமைதுக்கொள்ளவோ...?
இந்த - இலங்கை மண்ணில்
சமாதானம் எங்கே
மனக்கிறதேன்றோ?

அதன்
பூலோக வாழ்கையின்
எஞ்சிய காற்றும் சுவாசிக்கபடுகிறது

அப்போது
இவனின் துப்பாக்கி முனை
அந்த உயிரை குடிக்க
உற்றுப்பார்க்கிறது
அவனின் விரல்கள வில்லை
அமிழ்த ஆயத்தமாகிறது

அடுத்த வினாடி
படார்....

அதன் வயிற்றில்
செவ்விரத்தை பூத்திருந்தது
அனாலும் - அதன் உயிர்
உடனே செல்லவில்லை
நன்றி சொல்லவில்லை
என்பதனால்

தன்னுயிர் பறித்தவன்
வதனம் திரும்பியது - அதன்
முகத்தில் நன்றி ததும்பியது

அது
நன்றியுள்ள ஜீவன்
அந்த நன்றி எதற்காக?

மானிட ஜென்மத்தின்
மத்தியில் தன்னையும்
துயில வைத்ததற்காக

எமனுக்கு தன்னை
அடையாளம் காட்டிக் கொடுத்ததற்காக

மாண்புள்ள மனிதர்களை
மாக்கும் கருவியால்
தன்னையும் மாய்த்ததற்காக

அதன் உயிர்
இன்னும் செல்லவில்லை
அவனும் அதனருகே செல்லவில்லை

வேறிருவர்
அதனருகில் சென்றனர்
ஒருவனின் துப்பாக்கி
ஒரு குண்டை துப்பிவிட்டது
அதனை அந்த நன்றியுள்ள ஜீவன்
காதால் பெற்றுக்கொண்டது

எஞ்சியிருந்த உயிரும்
இப்போது எஞ்சவில்லை

இதட்கிலையில்
மற்றவனின் துப்பாக்கியில்
தூங்கி கொண்டிருந்த குண்டும்
அதனை முத்தமிட விரைந்தது

"டெக்டரில்" மண்
அள்ளப் பட்டுக்கொண்டிருந்தது
அதன் மேலும்
இரு வாளி கொட்டப்பட்டது

கல்லறை வாசகம் இல்லாத
ஒரு நன்றியுள்ள ஜீவனின்
சமாதி அங்கே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக