செவ்வாய், 20 ஜனவரி, 2009

நான் சொல்கிறேன்

ஓரிடத்திலிருந்து கொண்டு
உலகை சுற்றி வந்து
கருத்துகளாக நானாகி
என்னையே கரைத்து
பேனாவிநூடு நுழைந்து
காகிதத்திலே படர்கிறேன்

உலகம் சுற்றுவதைவிட
என் தலை சுற்றுவதே அதிகம்
எண்ணங்கள் என்னை
பின்னி எடுக்கும் பிரளயத்தின் போது

எனதின் எண்ணங்களை
கவிதை விளக்கிலே
எண்ணையாக ஊற்றுகிறேன்
நானே திரியாகியும் எரிகிறேன்
அந்த வெளிச்சத்தில்
என்னை பாருங்கள்

என் உள்ளதை ஒப்பிட
உலகத்தில் உள்ளதை எல்லாம்
உருவிப் பார்த்தேன்

முடியவில்லை
நானே எரிந்து
நீராகி கடல் நீரிலே கரைகிறேன்

அப்போதுதான் என் உள்ளத்தை
அறிந்து கொள்கிறேன்

என்ன அலைகள் எழுந்து
கரை வரை வந்து
வெளியே சொல்லமுடியாமல்
மெல்லப்படுகிறது...

இதனால்,
என் உள்ளத்தை திறந்து
உணர்வுகள் உருவாக்கும் - கவிதைகள்
உயிருள்ளவைகள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக