சனி, 13 ஜூன், 2009

நாளையும் நானிருப்பேன்

காலத்தின் காதுகளோடு நான்
ரகசியமாய்ப் பேசிக்கொள்கிறேன்
மழலை பேசும் குழந்தை நான்

இன்று - ஐம்பதாவது
பிறந்த நாளைக் கொண்டாடும்
பாலகன் நான்
என்னை வாழ்த்துங்கள்
பல நூற்றாண்டுகள் வாழ

ஆண்டு ஆயிரத்து நாட்பத்தொன்பதில்
தூண்டப் பட்ட இந்த விளக்கு
ஒரு ஓலைக் குடிசைக்கு
வெளிச்சம் கொடுத்தது
ஓய்ந்திடாது இன்று
பல மாடிக் கட்டிடங்களால்
பளிச்சிடுகிறது

பருவங்கள் ஒவ்வொன்றிலும்
கனிஸ்ட, சிரேஸ்ட, மத்திய
வித்தியாலயங்கள் என
நாமங்கள் நான் பெற்று - பின்
சாஹிராக் கல்லூரி என
நிலையான நாமம் பெற்றேன்
இன்று தேசிய ரீதியிலும்
தரமுயர்வு பெற்றேன்

முதலில்,
எனக்கு கொடுத்த
எம். எஸ். காரியப்பர் எனும்
உத்தமனை நினைத்து
சில கண்ணீர் துளிகளை
காணிக்கையாக்குகிறேன்

என்னை கையிலெடுத்து
முத்தமிட்ட
முதல்வர்களில் முதல்வரான
எம். ஐ. எம் காதர் முதல்
எ. எம். முஸ்தபா வரை
முழந்தாளிட்டு
முதல் மரியாதை செலுத்துகிறேன்

நான் ஒரு
தீக்குச்சியாய் எரிகிறேன்
சூரியனுக்கு போட்டியாய்
ஒரு தீபத்தை உருவாகுவதற்கு

என் கைகளில்
உளிகள் மட்டும்தான் இருக்கிறது
இங்கு வரும் கற்கள்
செதுக்கப் பட்டுக் கொண்டேதான்
செல்கின்றன

நான் ஒரு குயவனாய் இருக்கிறேன்
இங்கு வரும் களிகள்
வணையப் பட்டே
செல்கின்றன

இங்கு சிகப்பு ரோஜாக்கள்
பூப்பதற்கு அனுமதியில்லை
ஏனெனில் - இது
மல்லிகைகளால் மட்டும்
உருவாக்கப்பட்ட நந்தவனம்

கல்வி, கலை, விளையாட்டு
எத்துறையிலும் முன்னோடி
வெற்றிகள் பல கொண்டாடி
சாதனைகளும் படைத்ததுண்டு
எம் சரித்திரத்தில்
இதை விட அதிகமுண்டு

நான் கால ஓட்டத்தில்
வெள்ளி விழா, பொன்விழா
என்று கொண்டாடிக் கொண்டேதான் இருப்பேன்

ஆம்
நாளையும் நானிருப்பேன்
அடுத்த நூற்றாண்டு குழந்தைகளை
அரவணைப்பதற்காக
இளமையோடு தானிருப்பேன்

பின்குறிப்பு:
வெளியிடப்படாத ஸாஹிராவின் பொன்விழா மலருக்காக எழுதப்பட்ட கவிதை.
பத்தாண்டுகளின் பின் மீட்டு பார்க்கிறோம் ...

Advertise with my Blog

திருப்பு முனைக்கோர் திருவோலை

இலங்கையின் ஸாஹிராக்களில்
விளங்கிடும் ஒரு நாமம்
கல்முனை ஸாஹிராவென
காற் எண்திசையும்
போற்றிடுமே!

தேசிய சாலைகளில்
தேன் சிந்தும்
இக்கலா சாலை
சாதனைகளால் சரித்திரம் தொடுத்த
பூமாலை

இம்மாலை கொண்ட கழுத்து
எம் மனம் கவர்ந்தவர் - என்றும்
மதிப்பிற்கும்
மரியாதைக்கும் உரிய
அதிபர் பீர் முஹம்மத் எனும்
பொன்னெழுத்து

தங்க விழாவுக்கு
தயாராகிவிட்ட
தாயிவள் தலையதற்கு
முடி சூட வந்த
முடி சூடா மன்னர் இவர்

துடுப்பு தடுமாறும்
துயர நிகழ்வை போக்கி
உயர்வில் ஒரு துளி
சிந்த விட சித்தம் கொள்ளாத
சிறந்ததொரு படகோட்டி

ஆளுமையும், சொல் திறனும்
உழைப்பும், உற்சாகமும்
திறனும், தரமும்
ஒருங்கமைந்த ஓருருவம்

எங்களினிய அதிபரே!
வாழ்த்துகிறோம் கவி பாடி
வாஞ்சையுடன் உன்னை நாடி

இக்கல்லூரி மாணவர்களின்
மனங்களிலிருந்து சேகரித்த
வாழ்த்து பொட்டலத்தை
வார்த்தைகளாய் விரிக்கிறோம்

விஞ்ஞானப் பிரிவு மாணவர் மஜ்லிஸ்
பகுதித் தலைவர், ஆசிரியர்கள்
மாணவர்கள் சார்பாக
உளமார வாழ்த்துகிறோம்

கல்லூரியின் வளர்ச்சிக்காய்
கருத்தரிக்கும் உங்கள் முயற்சிகளுக்கு
அகிலக்கோன் துணை நிற்க
அனைவரும் பிரார்த்திக்கிறோம்

பின்குறிப்பு:
ஸாஹிரா கல்லூரியின் புதிய அதிபராக எ. பீர் முஹம்மத் அவர்கள் பதவி ஏற்றபோது 2000 பிரிவு மாணவர்களால் சயன்ஸ் நைட் நிகழ்வின் போது வழங்கப்பட்ட வாழ்த்துப் பா.

புதன், 10 ஜூன், 2009

புன்னகை

இதழ்கள் பேசும்
மௌன மொழி...

காதல் வைரஸ்

என் முன்னாலிருக்கும்
கணனித் திரை
கருப்பாய் இருக்கும் போதே
கலர் கலராய்
கனவுகள் எனக்குள் தெரிகிறது

என் நினைவுகள் எங்கோ
அனலொக் வடிவத்தில்
அலைகிறது

டைனிங்க் டேபிளில்
எனக்காய் காத்திருக்கும் உணவுகள்
போர்த்திக் கொண்டு உறங்கி போகிறது

நான் முன்னரைப்
போலில்லை என்று
முறைப்பாடுகள் கிடைக்கிறது

சாமியாரைச் சென்று சந்தித்தேன்
நீ தொற்று நோயாளி
தொலைவில் நில் என்றார்
அவரை தொற்றிவிடும் என்று பயந்தோ..?

மந்திரவாதியைச் சென்று சந்தித்தேன்
மனோவியலையும் தாண்டிய
மகா மந்திரத்தால்
மயக்கப் பட்டிருக்கிறாய் என்றார்

இறுதியில்
இருதய சத்திர சிகிச்சை
நிபுணரைச் சந்தித்தேன்
எச். ஐ . வி யை விடவும்
அபாயகரமான வைரஸ்
தாக்கியிருக்கிறது என்றார்

வைத்தியரே விபரமாய்
சொல்லுங்கள் என்றேன்
விளக்கினார்

எயிட்ஸை விடவும்
உயிர் கொல்லி நோய்
இதுவென்றார்

உலகில் எயிட்ஸால்
மரணித்தவர்களை விட
இதனால் மரணித்தவர்களே
அதிகம் என்றார்

எயிட்ஸால் தினம் தினம்
செத்து கொண்டிருப்பவர்களை விட
இதனால் சாகடிக்க படுபவர்களே
அதிகம் என்றார்

வைத்தியம் இன்றி
பைத்தியம் பிடித்தவர்களும்
உண்டு என்றார்
இராட்டினத்தை விட
இருபது மடங்கு அதிகமாய்
என் சிந்தனைகள்
சுழன்று கொண்டிருந்தன

பையிலுருந்த தொலைபேசி
நக்கலாய் சிரித்தது
அதன் சிரிப்பை அடக்கி
ஹலோ என்றேன்

என் காதுகள் இனித்தது
மூன்று சொல் மந்திரம்
என் மூச்சை அடக்கியது

முடியாமல் தவித்தேன்
உணர்வுகளை கவிதையாக்கலாம்
என்று காகிதத்தை எடுத்தேன்
என் பேனா கிறுக்கி கொண்டிருந்தது

வாசித்தேன்
அந்த கிறுக்கல் இப்படி இருந்தது
"காதல்"...

திசு பேப்பேர்

அழுக்காகுவதுக் என்றே
வெண்மையாய் பிறந்தவன்

இழப்பை விட வெறுப்பு கொடுமையானது

நண்பனே!
கோடிப் புண்ணியம் உனக்கு
தொலைந்து போன என்
புன்னகைகளை தேடித் தருவாயா?

கட்டெறும்பு போல்
சின்ன சின்னதாய் சேகரித்து வைத்த
என் கனவுப் பெட்டகம்
அவளின் ஒரு வார்த்தையால்
இலங்கை இராணுவத்தின்
பொஸ்பரசு குண்டில் அகப்பட்டது போல்
புஸ்வானமாகிப் போனதே..!

அரைத் தசாப்த காலத்தில்
நிறைத்து வைத்தது - அவள்
நினைவுகளை மட்டுமே
என் நெஞ்சில் - அவள்
வெறுத்தொதுக்கிய போது
அத்தனையும் அரை நொடியில்
அம்மியில் வைத்து அரைத்தது போலானதே!

கண்டவுடன் காதலை சொன்னவனை
பிடித்திருக்கிறது அவளுக்கு
காத்திருந்து, புரிந்து கொண்டு
காதல் கொண்டவனை
வெறுத்திருக்கிறது அவளுக்கு

அவள் உறவை பார்த்தாள்
நான் உணர்வை பார்த்தேன்
அவள் உருவத்தை பார்த்தாள்
நான் உள்ளத்தை பார்த்தேன்
கடைசியில் அவளுக்கு
பெயரும் புகழும் கூட
பிடிக்கும் என்று புரிந்து கொண்டேன்

தோல்விகளை மட்டுமே
தோழனாய் கொண்ட எனக்கு
இதுவொன்றும் புதிதல்ல

நீ அதிகமாய் நேசித்தவர்கள் உன்னை
அவமதித்தாலும்
மரியாதை செய்வதாய் நினைப்பாய்
புறந்தள்ளினாலும்
நெருக்கத்தின் நிலையாய் உணர்வாய்

நீ உண்மையை
உணர்ந்து கொள்ளும் ஒரு நாளில்
அந்த இழப்பை விட
அந்த வெறுப்பு
உயிருடன் உன்னை செந்தீயில் தள்ளும்

நண்பனே!
எனக்காக நீ வடிக்கும் கண்ணீர்
வெந்து போன இதயத்தை
விரைவாய் குணமாக்கும்

நீயாவது புரிந்து கொண்டாய்...
எனக்குள்ளும் சின்னதாய்
ஒரு இதயம் இருக்கிறதென்று....

செவ்வாய், 9 ஜூன், 2009

யாருக்காக?

அவளை அளவுக்கு மீறி
நேசித்தது உண்மைதான்
ஆனால் அது அவளுக்காக அல்ல

சுற்றி இருந்த உறவுகளின்
சுக்கு நூறாய் போன கனவுகள்
என்றோ ஒரு நாள்
நிஜமாக்கப் படவேண்டும்

கடந்த காலங்களில்
இழந்து போன
அவள் பெற்றோரின்
ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும்
தீர்க்கப் படவேண்டும்

ஆம்...
அவளை நேசித்தது கொள்ளை
ஆனால் அவள்தான்
புரிந்து கொள்ளவில்லை

பூக்காத மலர்

தினம் - என்
இரு கண்ணிகளில்
சிக்கி கொள்ளும்
சின்ன புறாவே..!

நான்
சந்தோசப்படவில்லை
சில வினாடிகளிலேயே
நீ தப்பித்துக் கொள்வதால்

கால்களை கண்ணியில்
கழற்றி வைத்துவிட்டு அல்ல...

பாதையில் உந்தன்
பாதங்கள் பதிந்த
தசங்களை மட்டும் விட்டுவிட்டு...

நீ
பறந்து செல்கிறாய்
இந்த குரங்கை
கூண்டிலடைத்துவிட்டு

உன் நினைவை விட்டு
இறங்க முடியவில்லை
நீயாவது சற்று இரங்க கூடாதா?

நிலவை போல
முகத்தை காட்டாது
மின்னலை போல
மறைந்து கொள்கிறாயே

நிலவை பார்த்ததால்
சூரியனைக் காண முடியவில்லை
மின்னலைப் பார்த்ததால்
பௌர்ணமியை ரசிக்க முடியவில்லை

என் இதயத்தை
விரித்து தருகிறேன்
அதில் உன் பாதத்தை வை.

அப்போதாவது நான்
உன் பாரத்தை
அறிந்து கொள்ள கூடும்

உன்னை திருடிவிட்டேன்
அதனால் நீ
எனக்கே சொந்தமென்று
எந்த நீதி மன்றத்தில்
முறையிடுவது?

தினம் - என்
இரு கண்ணிகளில்
சிக்கி கொள்ளும்
சின்ன புறாவே..!

இப்பொழுது நீ
சிறகசைக்க சம்மதிக்கிறேன்

நீ இன்னும்
பூக்காத மலர் என்பதால்


பின் குறிப்பு:
ஒரு பருவமாகத சிறுமி தினமும் என் பார்வையில் சிக்கி என் மென் மனதை தொட்ட போது.

தூரத்து நிலா

அடியே வேசி..!
உன்னை நான் ஏசுகிறேன்
உன் எழிலைக் கண்டு கூசுகிறேன்
உன் மானம் காக்க பேசுகிறேன்

தூரத்து நிலவே..!
நீ தூவும் மலரொளி கண்டு
கவிஞனானவன் கனக்க பேர்
உன்னை புகழ்பவன் கவிஞன்
நான் உன் கலைஞன்

பெண்ணாக உன்னை
பார்க்காத கவிஞன்
யாரென்று சொல்?
உன் மலரம்பில் மயங்காத
மானிடன் நான் என்று சொல்

உன்னை காதலிக்காத
கற்பலிக்காத
கவிஞன் யாருண்டு..?

கவிஞர்களின் காதலியே..!
உன் காதோடு ஒன்று சொல்கிறேன்
கேள்..!

நீ தூரத்து நிலா
உன்னை தொட்டனுபவிக்க
முடியவில்லை
அதனால்தான் - இவர்கள்
கவிதையால்
ஏணி கட்டிக்கொண்டிருக்கிறார்கள்

ஆயுள் முழுதும்
அடைய முடியாமல்
நீ ..!
எட்டாக் கனி என்றோ
பூமிக்குள் ஒளிந்து கொள்கிறார்கள்

நீ..!
சரியான ஏமாற்றுக்காரி
எத்தனை கவிஞனை
இத்தனை நிலைமைக்குத் தள்ளிவிட்டு
நீ மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்

பகலிலே
கதிரவக் கணவனுக்கு
பயந்து ஒழிந்து கொள்கிறாய்
இரவிலே - உன் எழில் முகம் காட்டி
இதயத்தை ஈர்ந்து கொள்கிறாய்
என்னை தினமும் கொள்கிறாய்

கவிஞனின் பூலோக காதலி எல்லாம்
உன்னை பகல் கூட்டிலேயே
பூட்டி வைக்க
ஐ. நா. சபையிடம்
மனு கொடுக்கிறார்கள்

கவிஞனின் விலை மாதே
இங்கு கற்புடன் வாழும்
கன்னிகளின் வாழ்கையில்
அல்லவா நீ
விளையாடுகிறாய்

அடியே தூரத்து நிலவே..!
நான் மட்டும் உன்னை
நகைப்பதால் தானோ
என்னை கண்டால்
மேகச் சேலையால்
உன் தேகத்தை மூடிக் கொள்கிறாய்...


பின் குறிப்பு:
இலங்கை ரூபாவாகினியில் இடம் பெற்ற கவியரசு வைரமுத்துவின் பேட்டி ஒன்றில் அவர் எழுதிய பாடலான "வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா? " என்ற பாடல் உருவான கற்பனையை கூறும் போது மூத்த கவிஞர்கள் தொடக்கம் அவர் வரை ஒவ்வொருவரும் நிலவை வர்ணித்த விதங்களை கூறிக்கொண்டே வந்து இறுதியாக அவர், நிலவை விளையாட அழைப்பது போல் வித்தியாசமான கற்பனையில் இப்பாடல் உருவானது என்றார்.
இதனால் இதனைவிட ஒரு வித்தியாசமான கற்பனை எனக்குள் உருவானதால் எழுதிய கவிதையே இது.
இக்கவிதையை எழுதிவிட்டு முடிக்க முடியாமல் வெளியில் எழுந்து சென்று வானத்தை பார்த்த போது அந்த பௌர்ணமி இரவில் அழகிய மேகம் அப்படியே அசைந்து வந்து நிலவை மூடி மறைத்தது. அதனால்தான் இக்கவிதையை அவ்வாறு முடித்தேன்.